பாசிச எதிர்ப்பு தின மாபெரும் மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம். - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 6 December 2023

பாசிச எதிர்ப்பு தின மாபெரும் மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.


கரூர் மாவட்டம் SDPI-கட்சியின் சார்பாக டிசம்பர்-6 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு 31-ஆண்டு கால அநீதியின் பாசிச எதிர்ப்பு தின மாபெரும் மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று (6.12.2023) மாலை 4 மணி அளவில் கரூர்,  தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்டத் தலைவர் முகமது அலி ஜின்னா தலைமையில்  நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI-கட்சியின் மாநில பேச்சாளர் அப்பாஸ் மந்திரி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார், மாவட்டத் துணைத் தலைவர் ஜாபர் அலி முன்னிலை வகித்தார்,  மாவட்ட செயலாளர் ஜாஃபர் அலி வரவேற்புரை ஆற்றினார்.


மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் அஜீஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷேக் பரீத், விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி, தமிழ் புலிகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, சாமானிய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர்  வழக்கறிஞர் குணசேகரன், ஆதித்தமிழர் பேரவை ரமேஷ் ஆகியோர் கண்டனத்தை பதிவு செய்தனர், மேலும் இந்நிகழ்வினை பள்ளப்பட்டி நகர துணை தலைவர் காஜாமைதீன் ஷேட்  தொகுத்து வழங்கியும், பள்ளப்பட்டி நகர தலைவர் மாலிக் தீன் கண்டன கோசம் எழுப்பியும், கரூர் நகர தலைவர் இஸ்மாயில் நன்றியும் கூறினர்.


மேலும் இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பாஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில், கட்சியின் நகர நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad