கரூர் மாநகராட்சி சார்பாக, தூத்துக்குடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமையிலும், ஆணையர் மற்றும் அனைத்து மண்டல தலைவர்கள் முன்னிலையிலும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கரூர் மாநகராட்சி ஆணையர் திருமதி. சுதா அவர்கள், அனைத்து மண்டல குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment