கரூர் மாநகராட்சி சமூக பாதுகாப்புத் துறை சார்பாக - குழந்தைகள் பாதுகாப்பு குழு காலாண்டு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குழந்தைகளின் உரிமைகளை காத்தல் பற்றியும், குழந்தை பாதுகாப்பிற்கான திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வுகள் குறித்தும் விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் திரு. சரவணகுமார் அவர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் திருமதி. மஞ்சு அவர்கள், மாநகர் நல அலுவலர் திரு. இலட்சிய வர்ணா அவர்கள், குழந்தை நல காவல் அலுவலர் அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment