கரூர் பாராளுமன்ற பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம். - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 2 December 2023

கரூர் பாராளுமன்ற பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.

கரூர் மாவட்ட தலைவரும் கரூர் பாராளுமன்ற தொகுதி அமைப்பாளருமான  செந்தில்நாதன் தலைமையில் கரூர் பாராளுமன்ற பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் 1.11.2023 வெள்ளிக்கிழமை தனியார் ஹோட்டலில்  நடைபெற்றது.


சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைத் தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான KP இராமலிங்கம் EX-MP கலந்துகொண்டு 10 ஆண்டுகால பிரதமர் மோடியின் சாதனைகள் மக்களிடம் எப்படி பிரச்சாரம் செய்வது, சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கூட்டங்களை நடத்துவது, கரூர் தொகுதியில் வெற்றி பெற பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதை பற்றியும், தேர்தல் தொடர்பான பணிகளை உடனடியாக தொடங்குவது பற்றியும் விளக்கம் அளித்து பேசினார்.


இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் பழனி கனகராஜ், திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் அஞ்சாநெஞ்சன், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் திரு விஜயகுமார், கரூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அஜித்குமார் கரூர் பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்நிகழ்ச்சியில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், விராலிமலை, மணப்பாறை, வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிகளின் அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள், மற்றும் 6 சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மண்டல் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மூன்றாவது முறையாக மரியாதைக்குரிய நரேந்திர மோடி அவர்களை பிரதமராக பொறுப்பில் அமர்த்தும் வகையில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் தாமரையை மலரச் செய்ய அயராது உழைப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad