கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் தரகம்பட்டியில் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் துணை ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் ஆகியோரை அவமரியாதை செய்ததையும் நாடாளுமன்றத்தை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டதையும் கண்டித்து கரூர் பாராளுமன்ற தொகுதி அமைப்பாளரும் கரூர் மாவட்ட தலைவருமான செந்தில்நாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி அமைப்பாளரும் கரூர் மாவட்ட செயலாளருமான விக்டோரியா வேலுச்சாமி அவர்களும் கரூர் மாவட்ட பொதுச் செயலாளரும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான ஆறுமுகம் அவர்களும் முன்னிலை வகித்தனர்.
ஆர்பாட்டத்தில் மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா வினோத்குமார், மருத்துவ பிரிவு மாநில செயலாளர் அரவிந்த் கார்த்திக், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சக்திவேல் முருகன், கோபிநாத், நவீன் குமார், மண்டல் தலைவர்கள் பாலுசாமி, யுவராஜ், ராமர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் கைலாசம் வரவேற்புரையும் கிருஷ்ணாயபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் சரவணன் நன்றியுரையும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment