பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செய்யப்பட்டது. - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 26 November 2023

பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செய்யப்பட்டது.


கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பட்டியலணி சார்பில் இன்று 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை காலை கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ படத்திற்கு பட்டியலணி மாவட்ட தலைவர் தங்கதுரை அவர்கள் தலைமையில் மரியாதை செய்யப்பட்டது. 

இதில் மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுகம், ஊடக பிரிவு மாவட்ட தலைவர்  ரவிச்சந்திரன், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் அருள்,  பரமத்தி வடக்கு ஒன்றிய தலைவர் செல்வி பழனிச்சாமி, மாயனூர் பஞ்சாயத்து ரகுபதி மற்றும் பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர் சிவகுமார், பட்டியல் அணி மாவட்ட துணைத் தலைவர்கள் முருகேசன், தங்கவேல், பட்டியல் அணி மாவட்ட செயலாளர்கள் நவீன்,அருள் உட்பட பட்டியல் அணி மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


1949 நவம்பர் 26'ம் தேதி, இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் பரிந்துரையை ஏற்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் இறுதி செய்யப்பட்டது. அதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26'ம் தேதி இந்திய அரசியலமைப்பு  தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Top Ad