கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணவாடி ஊராட்சி, கல்லுமடை அம்மன் நகரில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8.00 இலட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை அமைக்கும் பணியை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி அவர்கள் தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் கரூர் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் திரு. மெய்ஞான மூர்த்தி, கரூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. வெங்கடேஸ்வரன், கரூர் மாமன்ற உறுப்பினர் திரு.ஸ்டீபன் பாபு, கரூர் கிழக்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சண்முகசுந்தரம், மணவாடி ஊராட்சி மன்ற தலைவர் திரு. A.P. கந்தசாமி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் திருமிகு. வசந்தி சரவணன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமிகு.கிறிஸ்டி, திரு.பரமேஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment