பொது மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம். - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 22 November 2023

பொது மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்.


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 1  முதல் 48 வரை உள்ள பகுதிகளில் கட்டிட உரிமம் பெறுதல், சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் பெயர் மாற்றம் செய்தல், பிறப்பு இறப்பு சான்று பெறுதல், வரி இனங்கள், குடிநீர் மற்றும் தெருவிளக்கு சம்பந்தமான புகார்களுக்கு தீர்வு காணுதல் தொடர்பான பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் இன்று (22.11.2023) மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.


இம்முகாமில் பெறப்பட்ட 87 மனுக்களில் 11 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதர  மனுக்களில் தகுதி வாய்ந்த மனுக்களுக்கு அடுத்த 15 நாட்களுக்குள் விரைந்து முடிவு எடுத்து தீர்வு காணப்படும் என பொதுமக்களுக்கு  உறுதியளிக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் திரு.  சரவணகுமார் அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் திரு. பசுவை சக்திவேல் அவர்கள், திருமதி. மஞ்சுளா அவர்கள்,  மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad