கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் திரு V.V.செந்தில்நாதன் அவர்கள் தலைமையில் கரூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை தொகுதிகளில் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் நடைபெற்ற என் மண் என் மக்கள் பாதயாத்திரையை மிகச்சிறப்பாக வெற்றி பெறச் செய்த நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் விரைவில் நடைபெற உள்ள அரவக்குறிச்சி தொகுதி யாத்திரையை மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச் செய்ய ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் அனைத்து பூத்களிலும் பூத் கமிட்டியை வலிமை படுத்த மாவட்ட தலைவர் செந்தில்நாதன் அவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், அணி & பிரிவு மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment