கரூர் மாவட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பல்வேறு தனித்திறமைகளை கண்டறிய மாவட்ட அளவில் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் முதலிடம் பெற்று மாநில அளவில் திருச்சி, ராயவேலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள இன்று நம் கரூர் மண்ணிலிருந்து புறப்பட்ட மாணவச் செல்வங்களை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திரு. மணிவண்ணன் அவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. காமாட்சி அவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) திருமதி. செல்வமணி அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் திரு. பசுவை சக்திவேல் அவர்கள், திரு. வேலுசாமி அவர்கள் திரு. பூபதி அவர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பெற்றோர்கள் உடன் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment