கரூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக "நடப்போம் நலம் பெறுவோம்" என்ற சுகாதார நடை பயிற்சி துவங்கப்பட்டது. நடை பயிற்சியின் தேவையை உணர்த்தும் விதமாக மொத்தமாக சுமார் 8 கிலோமீட்டர் தூரம் இந்த நடை பயிற்சியானது நடைபெற்றது.
இதில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு.தங்கவேல் இ.ஆ.ப.,கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பிரபாகரன், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி ஆணையர் திரு. சரவணன், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், கரூர் மாநகராட்சி துணை மேயர் சரவணன், அரசு அலுவலர்கள் மாணவர்கள் குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment