கரூர் அய்யர்மலை அரசு கலைக் கல்லூரியில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 30 October 2023

கரூர் அய்யர்மலை அரசு கலைக் கல்லூரியில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.


டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டம், அய்யர்மலை அரசு கலைக் கல்லூரியில் 28.10.2023 சனிக்கிழமை  அன்று திறன் மேம்பாட்டு துறை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக நடைபெற்ற தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து இளைஞர்கள், பெண்கள், மற்றும் மாற்றத்திறனாளிகள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மீ.தங்கவேல் இ.ஆ.ப, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் திரு. இரா.மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு. க.சிவகாமசுந்தரி, மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருமிகு.தி.தேன்மொழி, குளித்தலை நகர்மன்ற தலைவர் திருமிகு. சகுந்தலா, மாவட்ட திட்ட இயக்குனர் திருமிகு.ம. வாணிஈஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ம.கண்ணன், கல்லூரி முதல்வர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


மேலும் பல தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்ந்தெடுத்தனர் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு பணியில் சேர்வதற்கான ஆணை வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad