கரூர் நகரில் அண்ணா வளைவு ஆலமர தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆதி வேப்பபூ மாரியம்மன், காளியம்மன் ஆலயத்தில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு 28.10.2023 சனிக்கிழமை மாலை 7.01 மணிக்கு அன்னாபிஷேகம் நடந்தது.
அரிசி சாதம்,காய் கனி வகைகள் வில்வம் கொண்டு அலங்காரம் செய்து லிங்க வடிவில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். தேவாரம் திருவாசகம் திருமுறை பாடி சிவ கைலாய வாத்தியம் முழங்க தீபாராதனை நடைபெற்று பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது, விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் உபயதாரார்கள் இணைந்து செய்திருந்தனர்.
No comments:
Post a Comment