கரூர் மாநகராட்சியில் +2 அரசு பொதுத்தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 2 March 2024

கரூர் மாநகராட்சியில் +2 அரசு பொதுத்தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்திகிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் இன்று (01.03.2024) நடைபெற்ற +2 அரசு பொதுத்தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் தேர்வுத் துறையால் நடத்தப்படும் மேல்நிலை இரண்டாம் ஆண்டுபொதுத்தேர்வு 01.03.2024 முதல் 22.03.2024 வரையில் நடைபெறவுள்ளது. 43 தேர்வு மையங்களில் 104 மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறுகிறது. முதல்நாளான இன்று தமிழ் பாடத்தினை 9392 மாணவமாணவியர்களும் பிரென்ச் பாடத்தினை 22 மாணவமாணவியர்களும் மற்றும் அரபிக் பாடத்தினை 132 மாணவிகளும் என மொத்தம் 9,546 மாணவ, மாணவியர்கள் தேர்வெழுதுகிறார்கள் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad