பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்ட பாஜ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவல கத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாளை (27ம் தேதி) பிரதமர் மோடி கலந்து கொள்ளும் மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை வெற்றி விழா நடக்கிறது.
இதில் கரூர் மாவட்டத்திலிருந்து ஒரு லட்சம் பேர்கலந்து கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இவற்றை விளக்கி பேசி ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் மாநில,மாவட்ட, ஒன்றிய,நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதிமுக,மக்கள் நீதி மய்யம்,காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உட்பட100க்கும் மேற்பட்டோர் மாவட்ட தலைவர் செந் தில்நாதன் முன்னிலை யில் பாஜவில் இணைந்தனர்.
வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் உமா தேவி, தோகைமலை கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜா பிரதீப், சமூக
ஊடகப்பிரிவு மாவட்ட துணைத்தலைவர் செந்தில் குமார்,வக்கீல் வடிவேல் உட்பட பலர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment